வெள்ளி, அக்டோபர் 19, 2012

காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நெருங்குகிறது


சென்னை,அக்.20 - வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினத்திலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-​ வங்க கடலில் நேற்று (நேற்று முன்தினம்) தென்மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சற்று மேற்கு நோக்கி நகர்ந்தது. அது தென்மேற்கு வங்க கடல் முதல் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடல் வரை டிக்கிறது. அதாவது இலங்கை, தமிழ்நாடு, ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் இன்று (நேற்று) காலை முதல் நிலை கொண்டுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம். உள்மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் பலத்த மழை பெய்யும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். தற்போது இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை அருகே உள்ளது. அது அப்படியே மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது. அப்போது மன்னார் வளைகுடா பகுதியை கடந்துதான் கரைக்கு வரும். அந்த சமயத்தில் மிக பலத்த மழை பெய்யும். கடந்த கால பதிவுகளை வைத்து பார்க்கும்போது காற்றழுத்த தாழ்வு நிலையானது, மன்னார் வளைகுடா பகுதியில் கடக்கும் போதும், அந்த பகுதியில் நிலை கொண்டு நீடிக்கும் போதும் மிக, மிக பலத்த மழை பெய்யும். எனவே அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். சென்னையை பொறுத்த வரை 2 நாட்களுக்கு விட்டு, விட்டு மழை பெய்யும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இன்று காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக மரக்காணத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.கல்பாக்கத்தில் 11 செ.மீ., கடலூரில் 8 செ.மீ., செங்கல்பட்டு, மகாபலிபுரம், சீர்காழியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. சிதம்பரம், சோழவரம், ராமேசுவரம், ராமநாதபுரத்தில் 6 செ.மீ., உத்தரமேரூர், கேளம்பாக்கம், திருத்துறைப் ண்டி, திருச்செந்தூர், விருத்தாச்சலத்தில் 5 செ.மீ., மீனம்பாக்கத்தில் 3 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது. மழை பெய்யும்போது திடீரென பயங்கர சத்தத்துடன் இடி தாக்குகிறது. இதில் சில இடங்களில் உயிரிழப்பு ஏற்படுவதுடன் வீடுகளும் சேதம் அடைகிறது. இடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வெட்ட வெளியில் நிற்க கூடாது. ஒற்றை மரத்தின் கீழ் நிற்க கூடாது. நிறைய மரங்கள் இருந்து அதில் உயரமான மரத்தின் கீழும் நிற்க கூடாது. மழை பெய்யும்போது வீட்டில் இருப்பது நல்லது. வீடுகளில் மழை பெய்யும்போது தொடர்ந்து டி.வி. பார்க்காமல் இருப்பது நல்லது. உயரமான வீடுகளாக இருந்தால் இடிதாங்கி வைப்பது அவசியம் ஒரு வீட்டில் இடிதாங்கி இருந்தால் அது அந்த வீட்டை மட்டுமே காப்பாற்றும். மற்ற வீடுகளை காப்பாற்றாது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக