அமெரிக்காவில் தாமதமாக வந்ததால் 2 தீயணைப்பு படை வீரர்கள் சுட்டுக்கொலை-
டிசம்பர் 25,- நியூயார்க் நகரில் ஒரு வீட்டில் திடீரென தீப்பிடித்தது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு டெலிபோன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வர கால தாமதமானது. இதனால் தீ அருகே இருந்த மற்றொரு வீட்டுக்கும் பரவியது.
எனவே, அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்களை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். அதில் 2 பேர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக