செவ்வாய், டிசம்பர் 25, 2012

பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட மருத்துவக் கல்லூரி மாணவிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை


டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட மருத்துவக் கல்லூரி மாணவியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் டெல்லியில் பாலியல் வன்முறைக்கு ஆளான மருத்துவக் கல்லூரி மாணவி சிகிச்சைக்காக டெல்லி சப்தர்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இவருக்கு வயிற்றிலேயே 6 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அவரது வயிற்றில் சிறுகுடல் பகுதியில் இந்த ஆபரேஷன்கள் செய்யப்பட்டன. சேதம் அடைந்த குடல்பகுதி ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. அந்த இடத்தில் ரத்தக் கசிவும், தொற்றும் ஏற்பட்டுள்ளது. ரத்தத்தை உறைய வைக்கும் அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து இருப்பதால் ரத்தப்போக்கு அபாயம் உள்ளது. இதனால் உடல் உறுப்புகள் செயல் இழக்கும் நிலை ஏற்படலாம் என்றும், 102 டிகிரி முதல் 104 டிகிரி வரை எப்போதும் காய்ச்சல் இருந்து கொண்டே இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவிக்கு இன்னும் செயற்கை சுவாசம்தான் பொருத்தப் பட்டுள்ளதாகவும், அவர் மிகவும் ஆபத்தான நிலையிலேயே இருப்பதாகவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர். மாணவியின் பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மாணவியின் உடல்நிலை குறித்து, சப்தர்ஜங் ஆஸ்பத்திரி டாக்டர் பி.கே. வர்மா கூறுகையில் அவர் மனதளவில் திடமாக இருக்கிறார். சுய நினைவுடன் பேசுகிறார். அவரை உட்கார வைத்து சிறிது தண்ணீர் கொடுத்தோம். அமர்ந்த நிலையில் மாணவியின் கால் பகுதிகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக