பிலிப்பைன்ஸின் டக்லோபான் நகர் மீண்டும் கடும் புயற்காற்றுத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
கடந்த வாரம் வீசிய ஹையான் பெரும்புயலினால் தாக்கப்பட்டு கடும் சேதங்களை எதிர்கொண்ட அந்த நகர் மீண்டும் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இப்போது வீசியுள்ள கடும் புயல் மேலும் துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டக்லோபான் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்து, இடிபாடுகளுக்கு இடையே வாழ்ந்து வருகின்றனர்.
நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க இராணுவ விமானங்கள் அந்த நகரின் விமான நிலையத்துக்கு சென்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான அறிகுறிகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று அங்குள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
அந்தப் பகுதியில் உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது என்றும், அவற்றை பெற்றுக்கொள்ள விரக்தியான நடவடிக்ககளில் மக்கள் ஈடுபடுகிறார்கள் எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
உணவுகளை சேமித்து வைக்கும் கிடங்குகள், மளிகை கடைகள் ஆகியவற்றை கூட்டத்தினர் சூறையாடுகின்றனர் எனவும், மக்கள் ஆத்திரமடைய ஆரம்பித்துள்ளனர் எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உதவிகள் எப்போது வந்து சேரும் என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரியாத சூழலே அங்கு நிலவுகிறது.
எனினும் உதவிப் பொருட்களை ஏற்றி டக்லோபான் நகருக்கு செல்லும் வாகனங்களுக்கு இப்போது துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
செவ்வாய், நவம்பர் 12, 2013
பிலிப்பைன்ஸ் டக்லோபான் நகரில் மீண்டும் புயல், மழை
பிலிப்பைன்ஸின் டக்லோபான் நகர் மீண்டும் கடும் புயற்காற்றுத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.
கடந்த வாரம் வீசிய ஹையான் பெரும்புயலினால் தாக்கப்பட்டு கடும் சேதங்களை எதிர்கொண்ட அந்த நகர் மீண்டும் இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புயலின் காரணமாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் இப்போது வீசியுள்ள கடும் புயல் மேலும் துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
டக்லோபான் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்து, இடிபாடுகளுக்கு இடையே வாழ்ந்து வருகின்றனர்.
நிவாரண உதவிகளை ஏற்றிக் கொண்டு பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க இராணுவ விமானங்கள் அந்த நகரின் விமான நிலையத்துக்கு சென்றாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான அறிகுறிகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று அங்குள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
அந்தப் பகுதியில் உணவு மற்றும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது என்றும், அவற்றை பெற்றுக்கொள்ள விரக்தியான நடவடிக்ககளில் மக்கள் ஈடுபடுகிறார்கள் எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
உணவுகளை சேமித்து வைக்கும் கிடங்குகள், மளிகை கடைகள் ஆகியவற்றை கூட்டத்தினர் சூறையாடுகின்றனர் எனவும், மக்கள் ஆத்திரமடைய ஆரம்பித்துள்ளனர் எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உதவிகள் எப்போது வந்து சேரும் என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரியாத சூழலே அங்கு நிலவுகிறது.
எனினும் உதவிப் பொருட்களை ஏற்றி டக்லோபான் நகருக்கு செல்லும் வாகனங்களுக்கு இப்போது துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்கள் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
திங்கள், நவம்பர் 11, 2013
பிலிப்பைன்சில் புரட்டிப் போட்ட ‘ஹையான்’ புயல் இன்று வியட்நாமைத் தாக்கியது

ஞாயிறு, நவம்பர் 10, 2013
கிழக்கு ஜப்பானை மறுபடியும் தாக்கிய 5.5 ரிக்டர் நில நடுக்கம்:புக்குஷிமாவும் குலுங்கியது
ஞாயிற்றுக்கிழமை கிழக்கு ஜப்பானை 5.5 ரிக்டர் அளவுடைய மிதமான நிலநடுக்கம் காலை 7.37 am இற்குத் தாக்கியுள்ளது.
இதனால் தலைநகர் டோக்கியோவில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதுடன் முன்னர் சுனாமி தாக்கிய ஃபுக்குஷிமா அணு உலைக்கு அண்மையிலும் அதிர்ச்சிகள் உணரப்பட்டதாகவும் ஆயினும் இதனால் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் குறித்த அணு உலையின் ஆப்பரேட்டர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கம் டோக்கியோவுக்கு வடக்கே 59 Km ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 30 செக்கன்கள் நீடித்த இந்த பூகம்பத்தை டோக்கியோவில் வசிக்கும் பல மக்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் டோக்கியோவிலும் அதற்கு அண்மையிலும் செல்லும் அதிவேக புல்லட் ரயில்களான ஷின்கான்சென் ரயில்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப் பட்டு தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளனவா என விரைவாக பரிசோதிக்கப் பட்டதன் பின் ரயில் சேவை உடனே வழமைக்குத் திரும்பியதாகக் கூறப்படுகின்றது.
ஜப்பானில் இதற்கு முன் ஏற்பட்ட மிக வலிமையான நிலநடுக்கமாக 2011 ஆம் ஆண்டு மார்ச்சில் அதன் வடகிழக்கு கடற்கரையில் ஃபுக்குஷிமா அணு உலைக்கு அண்மையில் ஏற்பட்ட 9 ரிக்டர் அளவுடைய பூகம்பமும் அதனால் விளைந்த சுனாமியும் கருதப் படுகின்றது. ஜப்பானில் அணு குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் மிக அதிக மக்களைப் (18 000) பலி கொண்ட இயற்கை அனர்த்தமாக இது கருதப் படுகின்றது.
பிலிப்பைன்ஸ் சூறாவளியில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பலி'

சனி, நவம்பர் 09, 2013
பிரேசிலில் இருந்து மேலும் இரண்டு மெட்ரோ ரயில் பெட்டிகள் கப்பலில் வருகிறது!
மெட்ரோ ரயில் திட்டம் சோதனையோட்டம் வெற்றி பெற்றதை அடுத்து, மேலும் 2 ரயில் பெட்டிகள் பிரேசிலில் இருந்து கப்பலில் வருகிறது.
14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த உள்ள மெட்ரோ ரயில் திட்டத்தின் 4 பெட்டிகளுடன் கூடிய சோதனையோட்டம் கடந்த 6ம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.
இதை அடுத்து மேலும் 2 ரயில் பெட்டிகள் பிரேசிலில் இருந்து கப்பலில் வந்து கொண்டு இருப்பதாகவும், இந்த ரயில் பெட்டிகள் டிசம்பர் மாதம் சென்னை துறைமுகத்தை வந்தடையும் என்றும் தெரிய வருகிறது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பரங்கிமலை வரை ஒரு ரயில் தடமும் என்றும், சென்னை சென்ட்ரலில் இருந்து வண்ணாரப் பேட்டை வரை ஒரு ரயில் தடமும் என்றும் இரண்டு வழித் தடங்களாக செயல்பட உள்ளது என்றும் தெரிகிறது.
மேலும் இந்த மெட்ரோ ரயிலுக்கு டிக்கெட் எடுத்து விட்டால் அவர்கள் மின்சார ரயில், மற்றும் மாநகரப் பேருந்துகள் என்று அனைத்திலும் பயணிக்கலாம என்றும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
புதன், நவம்பர் 06, 2013
உருளைக் கிழங்கின் விலையும் அதிகரித்து வருகிறது!
வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்ததை அடுத்து,
தற்போது உருளைக் கிழங்கின் விலையும் அதிகரித்து வருவது மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் மட்டும் அல்லாது, தென் மாநிலங்களிலும் வெங்காயத்தின் தேவை மிக அத்தியாவசியமானது. தற்போது வெங்காயத்தின் விலை கிலோ 80 முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்டு வரும் நிலையில்,
தற்போது வடமாநிலத்தவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக் கிழங்கின் விலையும் அதிகரித்து வருவது மக்களை கவலை மற்றும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முதற்கட்டமாக வடமாநிலங்களில் விலை அதிகரிக்கத் துவங்கி உள்ள உருளைக் கிழங்கின் விலை, தென் மாநிலங்களிலும் பரவக் கூடும் என்கிற அச்சமும் ஏற்பட்டு உள்ளது. தற்போது ஒரு கிலோ உருளைக் கிழங்கின் விலை 16 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை அதிகரித்து உள்ளதே மக்களின் இந்த .அச்சத்துக்கு காரணம்.
டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் நடக்க உள்ளநிலையில், இந்த வெங்காயம், உருளைக் கிழங்கு இவற்றின் மீதான விலை ஏற்றம், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிய வருகிறது.
திங்கள், நவம்பர் 04, 2013
அல் நாசர் உடல் நல்லடக்கம் மாலை 4 – 5 மணிக்கு!
ஞாயிறு, நவம்பர் 03, 2013
சோகத்தில் முடிந்த சுற்றுலா…! கடலில் குளிக்கச்சென்ற நமதூர் வாலிபரை கடல் அலை அடித்துச்சென்றது.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)